Monday, March 5, 2012

விவாகரத்து பிரச்னையா?வியாபாரத்தில் நஷ்டமா?ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?

விவாகரத்து பிரச்னையா?வியாபாரத்தில் நஷ்டமா?ரொக்கமும் சொர்க்கமும்
கிடைக்க வேண்டுமா?
Share
இதோ சுருக்கு வழி - கு(கி)றுக்கு வழி?!!

பொது ஜனங்களே, மகா ஜனங்களே, உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்னைகளா?
கவலைப்படாதீர்கள்!

கஷ்டப்பட்டு சம்பாதிக்காதீர்கள்; முயற்சி செய்து முன்னேற
நினைக்காதீர்கள்.

திட்டங்கள் தீட்டி தீர்வு காண முயற்சிக்காதீர்கள்.;

பெரிய செலவு இல்லை - மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.

இதோ ஒரு சுருக்கு வழி- கு(கி)றுக்கு வழி.

சொத்து வழக்கா? குடும்பத்தில் பாகப்பிரச்னையா? தம்பதிகளுக்குள் விவாக
ரத்து பிரச்னையா?

இவற்றிலிருந்து விடுபட ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடையுங்கள்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்யும் வெற்றிலை மாலையும் சாத்தி
வழிபடுங்கள். சாதகமான தீர்ப்புக் கிடைத்த பின் வடை மாலை சாத்துவதாக
வேண்டிக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் நஷ்டமா?

கவலைப்படாதீர்கள். லட்சுமி குபேரருக்கு நவ நிதிகளை வாரி வழங்கியவர் சிவ
பெருமான். அவருக் குரிய பிரதோஷ நாளில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து
வில்வ இலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.

---------- தினமலர் ஆன்மீக மலர்

பரதநாட்டியம் கற்கவேண்டுமா?

பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டுமா? இசைக் கருவிகளை மீட்டிட ஆசையா?
கல்விக் கடாட்சம் கிட்ட வேண்டுமா?

இதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? இதோ ஓர் எளிய வழி இருக்கவே இருக்
கிறது. நாம் ஏதாவது மந்திர உபதேசமோ, குரு உபதேசமோ பெறுவதென்றால் அதை மாசி
மகத்தன்று வைத்துக் கொள்ள வேண்டும். மந்திரம் பளிச்சென்று சித்தியாகும்.
நல்ல பலனைக் கொடுக்கும்.

அதே போல புதிதாக பரதநாட்டியம், இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, கணினி போன்ற
கலை கல்விப் பிரிவுகளை மாசி மக நாளன்று தொடங்குவது மிகவும் விசேஷமாம்.
ஏனெனில் சிவபெருமானுக்கே முருகப் பெரு மான் பிரணவ உபதேசம் செய்த நன்னாள்
இது.

-------------- தினகரன் ஜோதிட சிறப்பு மலர்

ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?

உங்களுக்கு சொர்க்கமும், ரொக்கமும் கிடைக்க வேண்டுமா? இதற்காக சிரமப்பட
வேண்டாம்.

ஏகாதசியன்று சொர்க்க வாசலில் நுழைந்து வாருங்கள்.

- தினத்தந்தி ஜோதிடம்

கையில காசு வாயில தோசை

இவ்வளவு கு(கி)றுக்கு வழிகள், சுருக்கு வழிகள் இருக்கும் பொழுது
அரசாங்கம் எதற்காக? சட்டங்கள் எதற்காக? திட்டங்கள்தான் எதற்காக?

குறிப்பு: இப்படி வெளியிடுகிற இதழ்களின் முதலாளிகளோ, கூலி எழுத்தாளர்களோ
இவற்றை மட்டுமே நம்பி வேறு எதையும் செய்யாமல் பூஜிக்கிறார்களா?
புத்தியைப் பயன் படுத்திப் பார்க்கவும்.

-------------- கருஞ்சட்டை 3-3-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!