Friday, December 23, 2011

என்று மாறுமோ இந்த நிலை? தந்தை பெரியாரின் கேள்விக்கு தமிழினமே உன் பதில் என்ன????



1.தமிழர் நிலை தாழ்ந்திருக்கிறது.
2.சமுதாயத்தில் கீழான சாதி.
3.கல்வியில் 100க்கு 80 தற்குறி.
4.செல்வத்தில் 100க்கு 75 கூலி சீவனம்.
5.தொழிலில் 100க்கு 75 சரீரப் பாடுபட்டு உழைக்கும் தொழில்(ஈனத் தொழில்) என்பது.
6.சர்க்கார் உத்தியோகத்தில் ஏவலாளி, பியூன், ஜவான், கிளார்க் வேலை (வகுப்புரிமையினால் தற்போது சிறிது அதிகம்)
7.ஒற்றுமையில் 108 சாதியும், கட்டுப்பாட்டில் அவனவன் சுய நலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதுவம்,ஒழிக்கச் சமயம் பார்ப்பதும்.
8.சமயத்தில் (மதத்தில்) எதிரிகளுக்கு அடிமையாய் இருந்து உழைத்துப்  போடுவது.
9.அரசியலில் வஞ்சக அயோக்கியருக்கு வால் பிடித்துக் கை தூக்குவது.
10.அதோடு, தமிழ்னாடு பூராவிலும் தமிழனால் மதிக்கக் கூடிய ஒரு தமிழன் கூடக் கிடையாது. அது போல,ஒரு தமிழனால் குறை கூறப்படாத மற்றொரு தமிழனும் கிடையாது.
11.தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது.
12.நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும் காரணம் என்ன என்பது கேள்வி.


Thursday, December 15, 2011

இப்போது புரிகிறதா இவ்விரு வார்த்தைகளும்....

[  (11.12.11) மதுரையில் நடைபெற்ற, முனைவர் வா.நேரு அவர்கள் எழுதிய "பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்" நூல் அறிமுக விழாவில், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர். மானமிகு.தகடூர்.தமிழ்ச்செல்வி அவர்கள் ஆற்றிய
உரையிலிருந்து ]

"sympathi" மற்றும் "empathy" ஆகிய சொற்கள், திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால்  தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. "sympathi" என்றால், மற்றவரின் நிலையை அறிந்து, அவர் படும் துன்பத்தை எண்ணி வருத்தப்படுவது,மனமிரங்குவது ஆகும்.  "empathy" என்றால், மற்றவராகவே மாறி, அவரது துன்பங்களை உணர்ந்து, அவைகளை நீக்கிட வலிந்துதவுவது,போராடுவது என்பதாகும்.
தந்தை பெரியார்,
பிறந்ததோ செல்வக் குடும்பத்தில், ஆனால் துன்பப்படும் ஏழையாகவே மாறி, அவர்தம் அவலநிலை போக்கிட அரும்பாடுபட்டார்.
சாதியிலும் மேல் சாதியில் தான் பிறந்தவர் என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளம்படும் துயரை,அறியாமையினால், அவர்களே அறிந்திராவிட்டாலும் அதனைத் துடைத்தெறிய போர்க்களம் பூண்டார்.இதையெல்லாம் விட, ஒரு ஆணாகப் பிறந்த பெரியார் தான் பெண்ணடிமை தீர,எந்த பெண்ணும் சிந்தித்திடாத அளவுக்கு, ஒரு பெண்ணாகவே மாறி சிந்தித்து நெருப்புக் கருத்துக்களால் ஆணாதிக்கத்தை அடித்து விரட்டினார். இப்போது புரிகிறதா இவ்விரு வார்த்தைகளும்....

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!