Sunday, September 22, 2013

பெரியார் 1000 வினாடி வினா எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாநகர் ,மதுரை புறநகர் மாவட்டங்களுக்கான
பெரியார் 1000  வினாடி வினா எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசளிப்பு விழா மதுரை, , , , வடக்கு மாசி வீதி,   தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் 22.09.2013 ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு        மண்டல  தி.க.தலைவர்    வே. செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். 
   ப.க.,மதுரை மாநகர்  மாவட்ட தலைவர் , சுப.முருகானந்தம்   அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

மதுரை அனுப்பானடி   மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி  தலையாசிரியை, திருமதி .பிரேமா கண்ணன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
பொ .நடராஜன் நீதியரசர் ஒய்வு ,செ .முனியசாமி மாவட்டத் தலைவர் தி.க.,க.அழகர் மாவட்ட செயலாளர் தி.க.,பொ .பவுன் ராசா தலைவர் .மதுரை புறநகர் மாவட்ட தி.க.,மன்னர்மன்னன் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்  அ.வேல்முருகன் , மதுரைபுறநகர் மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் , தமிழ் மக்களுக்கான அவரது தொண்டின் சிறப்புக்களையும் எடுத்துரைத்தனர்.



நிறைவாக,
பகுத்தறிவாளர் கழக  மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள்  கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துத்துரைத்து தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என்று அன்பழைப்பு விடுத்து தமிழர் தலைவர் கி.வீரமணி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோருடைய கல்வி சார்ந்த கருத்துக்களை விளக்கிச் சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.
சிறப்பு விருந்தினர் திருமதி.பிரேமா கண்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசு -புத்தகம் வழங்கப்பட்ட்து.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்ட்து. ப.கதோழர்.செ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இடவசதி கொடுத்த பள்ளியின் ஆசிரியர் திரு.அருள்மாறன் அவர்களுக்கு   பாரட்டும் நன்றியும் கூறி விடை பெற்றோம்.            வெற்றி பெற்ற மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.
நிகழ்ச்சியில் மு.கனி. மதுரை மாவட்ட தி.க இளைஞரணி தலைவர் பேக்கரி கண்ணன், தோழர் வேலுத்துரை ஆகியோர் சிறப்பாக கலந்துகொண்டு ஒத்துழைத்தனர்.



                 



தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!