Sunday, March 1, 2020

அப்பா....!!

#அப்பா

காட்டிலு மேட்டிலு நானே - கண்ணில்
கண்டதை மெய்யென நம்பிவைத் தேனே

கூட்டினில் முட்டையென் றென்னை - வைத்துக்
கூட்டினா யின்னுயிர் வாழ்வது தன்னை

ஊட்டினா யின்பத்தேன் நாவில் -  வெற்றி
ஊன்றினாய் வாழ்வினில் ஒவ்வொரு நாளில்

கேட்காமல்  தந்தாய்நீ யாவும் - உனக்
கேதுநான் தந்தேனோ இத்தனை நாளும்

வாட்டத்தை நான்கண்ட தில்லை - நான்
வாடநீ கண்டுமே நின்றது மில்லை

பாட்டொன்றில் சொல்லவோ வந்தேன் - உயிர்ப்
பாலாதால் உன்னைக்கு ளிப்பாட்ட வந்தேன்

ஆட்கொள்ள வேண்டும்நீ அப்பா -  உன்
அன்பொன்றே நான்கேட்டேன் அஃதென்ன தப்பா?

1 comment:

  1. வாட்டத்தை நான்கண்ட தில்லை - நான்
    வாடநீ கண்டுமே நின்றது மில்லை

    உண்மை

    ReplyDelete

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!