Thursday, May 26, 2011

தனித்தன்மை

தனித்தன்மை 


              சிந்த்த்தனையாளர் அரிஸ்டாட்டிலிடம் , கிரேக்கத்தைச் சேர்ந்த்த பல இளவரசரான அலெக்ச்சாண்டரும் அவர்களில் ஒருவர் . கிரேக்க கலாச்சாரம் தான் உன்னதமானது என்ற கருத்துடையவர், அரிஸ்டாட்டில். பல கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து , புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென எண்ணியவர், அலெக்சாண்டர்.
                 ஒரு நாள் தன்னுடைய மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது "நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி செய்வதற்கு கடைப்பிடிப்பீர்கள்?" என்று ஒவ்வரையும் பார்த்து  கேட்டார்.
                  "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரிஸ்டாட்டிலின் போதனைப்படி தான் ஆட்சி செய்வோம்" என எல்லோரும் கூறினர்.
                  "உங்கள் போதனையை மனதில் வைத்துக்கொள்வேன். அனால்,அந்த சந்தர்ப்பத்தில் என் மனதுக்கு எது  சரியென்று படுகிறதோ , அந்த மாதிரி தான் ஆட்சி செய்வேன்" என்றார் அலெக்சாண்டர்.
                  குருவிடம் அலெக்சாண்டருக்கு பக்தியும், விசுவாசமும்  இருந்ததாலும் , தனக்கென்று தனியான சிந்த்தனை இருப்பதைத் தெளிவுப்படுத்தும் வகையில் அவர் அமைந்த்திருந்தது. 
                   இந்த உலகத்தில் எவ்வளவோ விசயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம் . இருந்தாலும், நமக்கென்று உள்ள தனித்த சிந்தனையை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. ஒருவேளை அப்படி இழந்து விட்டால், உங்களின் மதிப்பு தெரியாமல் போய்விடும்.  
                                                                        நன்றி தினத்தந்தி 1-4-2011   

Monday, May 23, 2011


தந்தை பெரியாரைப் பற்றி என் தந்தை.....



அறிவு எங்களுக்கு 

அதிசயமாக போன பிறகு....
மானம் எங்களுக்கு
மறதியாக போனபிறகு....
வீரம் எங்களுக்கு
வெறுங்கதையான பிறகு...
அடிமைத்தனமே எங்களது
அன்றாட வாழ்வான பிறகு...
சுயநலம் எங்களுக்கு
சோறாக ஆனபிறகு....
"கடவுள்" எங்களின்
கருத்தையும் கையையும் கட்டிப்போட்ட பிறகு....
"விதி" எங்கள் முயர்ச்சிகளை
விலைக்கு வாங்கிவிட்ட பிறகு...
"சாத்திரங்கள்"-எங்கள்
சாகசங்களை அடக்கிவிட்ட பிறகு...
பார்பனனும் பண்டிகைகளும் எங்கள்
பணங்களை பறித்துவிட்ட பிறகு...
சொரணை எங்களுக்கு
சொந்தமில்லாது போய்விட்ட பிறகு...
உணர்வு எங்களைவிட்டு
ஊர்தேசம் போய்விட்ட பிறகு...
"மனிதன்" என்ற நிலைமாறி - நாங்கள்
மரக்கட்டைகளாக ஆன பிறகு...
புனிதனே !! நீ வந்தாய்...
புயலாகி பொய்மைகளைச் சாடினாய்...
ஓய்வே கொள்ளாமல்
ஊர்நகரம் சுற்றிவந்தாய்...
ஒலிச்சங்காய் ஓங்கிக்குரல் கொடுத்து
எம் தூக்கம் அகற்றிவிட்டாய்..!!
கருப்புச் சட்டையுடன் வந்தாலும்
எங்களை
வெளிச்சத்திரற்கு கொண்டு வந்துவிட்ட
பொறுப்புள்ள தந்தை நீதான்!
உன்
பூப்பாதம் நடந்த வழியினில்
புது உலகம் படைக்க நாங்களும்
"எங்களையே அழித்து -ஒளிரும்
கருப்பு மெழுகுவர்த்திகளாய்"
 நேற்றும் இன்றும் என்றும்
வாழ்வோமய்யா..!!!
                       - சுப. முருகானந்தம் 

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!