Thursday, November 18, 2010

விலங்குகளிடமிருந்து கற்போம்(1)

ஒரு காடு...

அங்கே ஒரு இடத்தில் வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த சமயம் பார்த்துப் பசியோடு ஒரு சிங்கம் அந்த பக்கமாக வருகிறது.வரிக்குதிரைகளை அது பார்த்துவிடுகிறது.அவ்வளவுதான் விரட்ட ஆரம்பித்தது.

கூட்டம் சிதறி ஓடியது.அந்தச் சிங்கம் ஒரே ஒரு வரிக்குதிரையைப் பிடித்துக் கொண்டது.அவ்வளவுதான்.

அதன் பிறகு மற்ற வரிக்குதிரைகள் எல்லாம் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் வழக்கம் போல மேய ஆரம்பித்துவிட்டன.

பயந்துகொண்டு இடத்தையே காலி பண்ணிவிட்டுப் போய்விடவில்லை.

மனிதனுக்கு ஆறு அறிவு என்கிறோம்.மிருகங்களுக்கு அய்ந்து அறிவு என்கிறோம்.இருந்தாலும்,மிருகங்களிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உண்டு.

முதல் பாடம் :

விலங்குகளுக்குப் பயம் என்பது மிகவும் குறைவு.

மனிதனுக்குப் பயம் என்பது அதிகம்.

மனிதன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான்.

நடந்ததை நினைத்து பயப்படுகிறான்.மற்றவர்களைப் பார்த்து பயப்படுகிறான்.மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறான்.

ஆனால்.....

விலங்குகள் இப்படி இல்லை.தங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற நிலையில் தான் விலங்குகள் பயப்படுகின்றன.

ஆபத்துச் சூழ்நிலை விலகியவுடன் அவற்றின் பயமும் விலகிவிடுகிறது.அதன் பிறகு கவலைப்படாமல் எப்போதும் போல வாழ ஆரம்பித்துவிடுகின்றன.-தென்கச்சி சுவாமிநாதன்

மனிதர்கள் நாமும் அதுபோல் செய்தால் என்ன ? -அகில்

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!