Thursday, May 26, 2011

தனித்தன்மை

தனித்தன்மை 


              சிந்த்த்தனையாளர் அரிஸ்டாட்டிலிடம் , கிரேக்கத்தைச் சேர்ந்த்த பல இளவரசரான அலெக்ச்சாண்டரும் அவர்களில் ஒருவர் . கிரேக்க கலாச்சாரம் தான் உன்னதமானது என்ற கருத்துடையவர், அரிஸ்டாட்டில். பல கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து , புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென எண்ணியவர், அலெக்சாண்டர்.
                 ஒரு நாள் தன்னுடைய மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது "நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி செய்வதற்கு கடைப்பிடிப்பீர்கள்?" என்று ஒவ்வரையும் பார்த்து  கேட்டார்.
                  "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரிஸ்டாட்டிலின் போதனைப்படி தான் ஆட்சி செய்வோம்" என எல்லோரும் கூறினர்.
                  "உங்கள் போதனையை மனதில் வைத்துக்கொள்வேன். அனால்,அந்த சந்தர்ப்பத்தில் என் மனதுக்கு எது  சரியென்று படுகிறதோ , அந்த மாதிரி தான் ஆட்சி செய்வேன்" என்றார் அலெக்சாண்டர்.
                  குருவிடம் அலெக்சாண்டருக்கு பக்தியும், விசுவாசமும்  இருந்ததாலும் , தனக்கென்று தனியான சிந்த்தனை இருப்பதைத் தெளிவுப்படுத்தும் வகையில் அவர் அமைந்த்திருந்தது. 
                   இந்த உலகத்தில் எவ்வளவோ விசயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம் . இருந்தாலும், நமக்கென்று உள்ள தனித்த சிந்தனையை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. ஒருவேளை அப்படி இழந்து விட்டால், உங்களின் மதிப்பு தெரியாமல் போய்விடும்.  
                                                                        நன்றி தினத்தந்தி 1-4-2011   

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!