Thursday, October 13, 2011

ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன?

அண்ணா தி.மு.க.வுக்குச் சொல்லுங்கள்!

ஆயுத பூஜையைக் கலைஞர் ஏற்கவில்லை; ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேசுகிறார் என்று திமிரடியான வார்த்தைகளைப் பயன் படுத்தும் தினமணியே! தினமணியே!

கலைஞர், பெரியார், அண்ணா கொள்கை களைத்தான் சொல்லு கிறார். நியாயமாக பெரியார் அண்ணா கொள்கைகளைப் பின்பற் றாமல் அதற்கு எதிராக பார்ப்பனீயத்துக்கு வக் காலத்து வாங்கும் வகை யில் ஆயுத பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரைத் தான் விமர்சித்திருக்க வேண்டும், தினமணி! ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன? இதோ! எண்ணிப்பார் கோபியாமல்! எலக்ட்ரிக் இரயில்வே,

மோட்டார் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இவை களுக்காக மருந்து ஆப்ரே ஷன், ஆயுதங்கள், தூரதிருஷ் டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப்மெஷின் அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத் துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,

இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனி தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் ஊழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற் றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடு பட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுதபூசை, சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்! அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடி னவர்களல்லர்! நூற்றுக்கு நுறுபேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்த தில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாத வன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இது வரை, என்ன, புதிய , அதி சயப் பொருளைக் கண்டு பிடித்தோம்? உலகுக் குத் தந்தோம் என்று யோசித் துப் பாரப்பா! கோபப் படாதே! உண்மை அப்படித் தான் நெஞ்சைக் கொஞ்சம் உறுத்தும். மிர ளாமல் யோசி. உன்னையும் அறி யாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல் களை எல்லாம் கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கி லேயன் வருவதற்கு இடையே இருந்த காலத் திலே அச்சு இயந்திர மாவது கண்டுபிடித்திருக் கக்கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டு பிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங் கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே! அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே! எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோ கப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரி சையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அசோசி யேடட் அல்லது இராயட்ர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில் லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை! சிபி, சினிமா பார்த்த தில்லை! தருமராசன், தந் திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளையெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கி றோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள் களைத் தந்த அறிவாளர் களை மறந்துவிடுகிறோம், அவர்கள்

சரசுவதி பூசை; ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கி றோம். இது முறைதானா?

பரம்பரைப் பரம்பரை யாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை; ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில் லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதாரப் புருடர்கள் காலத்திலே கூட இல் லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக் கும். அதையும் தாண் டினால் விவேகம் பிறக் கும். யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக் குள்ளாவது! - (திராவிட நாடு- 26.10.1947)

இதுதான் அண் ணாவின் கொள்கை! அந்த அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் கலைஞரைச் சாடுவதும், அந்த அண் ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத் தைக் கொடியிலும் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரைச் சாடாமல் விடுவதும் எதற்காக?

மனுவாதி ஒரு குலத் துக்கொரு நீதி என்பார் களே - அது இது தானோ!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!