Friday, December 23, 2011

என்று மாறுமோ இந்த நிலை? தந்தை பெரியாரின் கேள்விக்கு தமிழினமே உன் பதில் என்ன????



1.தமிழர் நிலை தாழ்ந்திருக்கிறது.
2.சமுதாயத்தில் கீழான சாதி.
3.கல்வியில் 100க்கு 80 தற்குறி.
4.செல்வத்தில் 100க்கு 75 கூலி சீவனம்.
5.தொழிலில் 100க்கு 75 சரீரப் பாடுபட்டு உழைக்கும் தொழில்(ஈனத் தொழில்) என்பது.
6.சர்க்கார் உத்தியோகத்தில் ஏவலாளி, பியூன், ஜவான், கிளார்க் வேலை (வகுப்புரிமையினால் தற்போது சிறிது அதிகம்)
7.ஒற்றுமையில் 108 சாதியும், கட்டுப்பாட்டில் அவனவன் சுய நலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதுவம்,ஒழிக்கச் சமயம் பார்ப்பதும்.
8.சமயத்தில் (மதத்தில்) எதிரிகளுக்கு அடிமையாய் இருந்து உழைத்துப்  போடுவது.
9.அரசியலில் வஞ்சக அயோக்கியருக்கு வால் பிடித்துக் கை தூக்குவது.
10.அதோடு, தமிழ்னாடு பூராவிலும் தமிழனால் மதிக்கக் கூடிய ஒரு தமிழன் கூடக் கிடையாது. அது போல,ஒரு தமிழனால் குறை கூறப்படாத மற்றொரு தமிழனும் கிடையாது.
11.தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது.
12.நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும் காரணம் என்ன என்பது கேள்வி.


No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!