Monday, January 14, 2013

சபரிமலையில் ஜோதி தெரிந்தது - பக்தர்கள் பரவசம்- தினமலர் செய்தி-15.01.13

மகரசங்கராந்தியன்று கேரள வனத்துறையினர் மற்றும் கேரள மின்சார வாரியம்  (KSEB) இணைந்து ஏற்றப்படும் கற்பூரத்தின் தீபமே மகரஜோதி (மகர விளக்கு). இது அங்கு அமைக்கப்பட்ட காங்கிரிட் மேடையில், அதாவது சபரிமலைக்கு நேர் எதிர் திசையில் எரியூட்டப்படும். சபரிமலையில் இருக்கும் இறைபற்றாளர்கள் கண்களுக்கு இவர்கள் தெரியமாட்டார்கள். சுமார் ஆறுமணிக்கு கிலோ கணக்கில் கற்பூரங்களை பெரிய தட்டிலிட்டு, பற்றவைத்தபின் அதை முதலில் தூக்கி கண்பிப்பார்கள்.  உடனே ஈர சாக்குப் பை கொண்டு அணைப்பார்கள். மறுபடியும் ஏற்றி காண்பிப்பார்கள், ஈரசாக்கு கொண்டு அணைப்பார்கள். மூன்றாம் முறை ஏற்றி காண்பிப்பார்கள், ஈரசாக்கு கொண்டு அணைத்து விட்டு வேலை முடிந்து விட்டது என்று வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். இதுதான் அங்கு வருடாவருடம் நடப்பது. அந்த மலைப்பகுதி கேரள வனக் காவலர்களாலும், அங்கிருக்கும் பொச்சு பம்பா அணையின் மின்னேற்று ஊழியர்களின் கட்டுபாட்டிலும் அந்தப்பகுதி அதிக பாதுகாப்புடன் இருப்பதால் அங்கு யாரும் செல்ல முடிவதில்லை. காரணம் வியாபாரம் தான். இந்த தீபம் இந்த ஊழியர்களின் உதவியோடு தான் ஏற்றப்படுகின்றது. ஏற்றுபவர்களும் இவர்களே. இதை எப்படியோ நண்பர் சைனோஷ் மோப்பம் பிடித்து வந்து விட்டார் போலிருக்கின்றது. அதை அவர் இடுகையின் மூலம் வெளியிட்டுள்ளார், படங்களுடன். உண்மை என்றாவது வெளி வந்துதானே ஆகவேண்டும். காணொளி (வீடியோ) காட்சிகளும் வெளியிட்டுள்ளார்.


ஆதாரம் இரண்டுhttp://sinosh.wordpress.com/2008/08/26/makarajyothy/


No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!