Monday, July 8, 2013

"ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் " நூல் படித்தேன்


ஆரியம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு ஆற்றலுள்ள தமிழனை விலைபேசி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்.கவிஞர் கண்ணதாசனை விலை பேசி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதச்செய்து சரிந்த இந்து மதத்தை தாங்கிப் பிடித்தனர். இப்போது அதே வரிசையில் எழுத்தாளர் குணா எனப்படும் எஸ் .குணசீலன் என்பவரின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று தமிழ் தேசிய வியாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்....அப்போது போலவே , இப்போதும் , கிளர்ந்தெழுந்து அந்த நூலை அலசி ஆராய்ந்து ...மானமிகு. மஞ்சை வசந்தன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் படைத்துள்ள "ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் " நூல் படித்தேன்   தமிழர்தம் இனமான போருக்கு நல்ல ஆயுதம்.தமிழை, தமிழர்களை காக்கும் கவசமே "திராவிடர்" எனும் சொல் , ஆரியம் உள் நுழைய அனுமதிக்காத அரண் அது. இனவுணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள்.இன்னும்..இன்னும்.....248 பக்கங்கள். விலை.ரூ.100.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!