Thursday, July 18, 2013

ஊனம் மனதிலா ? உடலிலா?



ஒருவன் 
மலையென நிமிர்ந்த தோள் 
விளைந்த மரமெனும் கையும் காலும் ....
ஓடியே உலகை சுற்றும் 
நெஞ்சுரம் கொண்ட மாந்தன்......
கண்ணிலே ஒளிதானில்லை....- அது 
காட்டிடும் வழிதானில்லை.....

மற்றொருவன்...
கையுண்டு .. கண்ணுண்டு 
கால்களில்லை ...
நத்தையும் அவனும் ஒன்று ...
நகர்வதில் உலகை கண்டு .....

நண்பர்களாயினர் இருவருமே..

நடக்க முடிந்தவன் நடந்தான் ..
பார்க்கத் தெரிந்தவன் ...
அவன் தன் தோள்மீது 
அம்ர்ந்து வழிகாட்டிடவே ....... 
நாடெங்கும் ஒலித்தது தமிழ் பாட்டு 
ஞாலம் வியந்தது அதை கேட்டு ...

உடலிலே  அழகோடு 
உள்ளத்தில் குறையோடு 
உள்ளவர் வெறுங்கூடு....
மனதெலாம் நிறைவோடு 
மகிழ்ச்சியில் உறவாடும் 
மனிதருக்கில்லை குறைபாடு ....

உடல் நலக் குறைபாட்டில் 
உள்ளதோ கேடு?
மனநலக் குறைபாடே 
பொதுநலக் கேடு .....

ஊனம் தமிழில்லை 
ஊனம் தமிழர்கில்லை 

மனிதஇனம் தழைத்திடவே 
மனநலம் போற்றுவோம் 
மாற்றுத் திறனாளிகளை

மனதார வாழ்த்துவோம் ......

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!