Wednesday, August 7, 2019

வீட்டிற்கு வரப்போகும் புதுவரவிற்கு வரவேற்பு


எடுப்பு:
பொன்னே புதுவானே
பொன்னின் மணியென
பூப்பாய் இந்நாளே..

உந்தன் முகங் காணத்தான் தவிக்கின்றோம்..

உன்மழலை கேட்கத்தான் துடிக்கின்றோம்

தேரில் வாராய் துன்பந் தீரவாராய்

தொடுப்பு 1:
அன்னைத் தமிழின் அழகென வருக...
தந்தை குணத்தில் தளிரென வருக...

எங்கள் இனங் காப்பாய் தேனின்
இனிய தழிழாளே...

ஊரே கூடி உனைப் பார்க்கவே...
உறவும் பாடி உனை வாழ்த்தவே..
(பொன்னே..புதுவானே)

தொடுப்பு 2;
நாளை யெண்ணி நாங்களு மிருப்போம்

நங்கை முகங் கண்டு நகைப்பினில் குதிப்போம்...

நாட்டையு மறவாதே அம்மாநீ
நன்றியு மறவாதே

வாநீ யிங்கு வளருங் கதிர்
வந்தால் தானே புலரும் புவி...
(பொன்னே..புதுவானே)

சுப முருகானந்தம்.
உறுப்பினர் எண் வழங்கப்படவில்லை அம்மா

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!