Friday, August 30, 2019

கலைவாணர்


கலைவாணர்

நினைவு நாள்


கிந்தனா ரென்றுபேர் சாற்றி - நீ
கேடாம்ப ழங்கதை மாற்றி - ஒரு
கிளிபோலவும் மொழிபேசிய
திரையோவியம் மறைந்தேகிடக்
கிளர்ந்தாய்! - புகழ் - அளந்தாய்!!

வந்தப டத்தினி லெல்லாம் - நீ
வந்துக தைத்தன வெல்லாம்
மனையாளவள் அறிவாகிய
துணையேகவு விதைதூவிய
வழியே! - அறிவின் - ஒளியே!!


வாடிய உள்ளங்கள் பார்த்து - நீ
வாரிவ ழங்கினாய் ஆர்த்து - உன்
மனமாகிய கடலேயொரு
அலையாகிய பொருளேதரு
மன்றோ - அருள் - குன்றோ!!


 தேடிய செல்வங்கள் தீர்த்து - நீ
சென்றாயோ மாண்பினைச் சேர்த்து - அத்
திரைவானதில் நிலவாகியும்
மறையாதொரு புகழாகியும்
சென்றாய் - எம்மை - வென்றாய்

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!