Thursday, August 23, 2012

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்

இங்கர்சாலின் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளில் சில முக்கியமான பொன்மொழிகளைக் கீழே தருகி றோம்.
  • மனிதன் வாழவேண்டுமானால், மனிதன் முன்னேற வேண்டுமானால் மதத்தை அழித்தாக வேண்டும்.
  • உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம்.
  • உண்மை முன்னேற்றத்தின் அடித்தளம்; சுவர்கள்; அழகிய கட்டடம்.
  • உண்மை இன்பத்தின் தாய். உண்மை மனிதனை நாகரிகமாக்கு கிறது; தூய்மையாக்குகிறது. மனிதனுக்கு தைரியம் அளிக்கிறது.
  • உண்மைதான் பகுத்தறிவுவாதி யின் வாளும், கேடயமும்.
  • சிந்தனையில் மலரும் உண்மை யான எண்ணத்தை யார் யார் வெளி யிட மறுக்கிறார்களோ, மறுக்கப் படுகிறார்களோ, அவர்கள் மனித நாகரிகத்தின் எதிரிகள்; முன்னேற் றத்தின் பகைவர்கள்.
  • அறிவாற்றலால் தீர்க்கப்படாத எந்தப் பிரச்சினையும் வன்முறையால் தீர்க்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும்.
  • மூடநம்பிக்கை மனித ரத்தத்தைச் சிந்தச் செய்கிறது; விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகிறது.
  • சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும். சலிப்பு காட் டாமல உழைக்க வேண்டும். நாம் தைரியமாக இருக்கவும், இன்பமாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
  • கல்வி மனிதனுக்கு உண்மை யான அறிவையும், ஆராய்ச்சித் திறமையையும் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனத்தினுள் எவ்விதமான மூட நம்பிக்கையும் புகவிடக்கூடாது.
  • குழந்தைகளுக்கு நம்ப அல்ல; சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண் டும்.
  • மதவாதிகள், மந்திரவாதிகள், குறி சொல்வோர்கள் ஆகியோரை உங்கள் குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
  • இதுவரை மனித சமுதாயம் செய்துள்ள கோடானு கோடி பிரார்த்தனைகளில் ஒன்றுக்காவது ஆண்டவன் விடை அளித்ததாக உலக வரலாற்றில் சான்று உண்டா?
பகுத்தறிவாளர்களாகிய நாம் தந்தை பெரியார், அறிஞர் இங்கர்சால் ஆகியோரின் பொன்மொழிகளை உள்ளத்தில் பதிய வைத்து வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்வோமாக!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!