Saturday, January 26, 2019

அறிவும் மானமும் அருள்வாய் தமிழே



இறந்தவொரு மொழியிலன்றோ இணையேற்பு நடத்துகின்றார்
சிறந்ததொரு படிப்பென்றால் திகழ்வதுமாங் கிலந்தானாம்
பிறந்தவொரு மழலைக்குப் பெயர்வைக்கும் பொழுதினிலும்
மறந்துமுனை நினைக்காத மடமையிலே யுழலுகிறார்

ஆதலினால்

அறிவால் பூக்கும் அகத்தின் மானம்
செறிவாய் தேக்குந் திறனைச்
சொரிவா யின்றே தொல்தமிழ்த் தாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!