Sunday, December 23, 2018

டிசம்பர் 24' தந்தை பெரியார் நினைவு நாளில் சபதமேற்போம்!

தந்தை பெரியார் நினைவு நாளில்

வாழ்ந்தபோது வானிடியாய் மறைந்தபின்னே எரிமலையாய்
மண்ணில் நின்று
சூழ்ந்தபகை  அழித்தொழிக்க நெருப்பாறாய் நீண்டெழுந்தே
சுடுவா யின்றும்!
தாழ்ந்தநிலை யாக்கியெமைத் தலைகுனியச் செய்தஜாதி
தவிர்த்துக் காவல்
வேலியென்றே தமிழினத்தைக் காத்துநின்றே எம்மனதை வென்றாய் அய்யா!!
‌அறுத்தெறிந்தே 'கர்பப்பை'  அழித்திடுக ஆண்மையென
 அய்யா நீதான்
 கருத்தளித்தே அகிலத்தைக்                           கலங்கடிக்கும் பூகம்பக்
 கருவாய் நின்றாய்!
உருக்கிவைத்த சிலையெனவே  ஊர்நடுவில் நின்றாலும்
உன்னைக் கண்டு
தருக்கிடுவோர் வாலாட்டம் தமிழ்நிலத்தில் நுழையாது
வெல்வோம் அய்யா..!!        
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!