Saturday, December 22, 2018

குறையென்ன கண்டீர்?

*குறையென்ன கண்டீர்*

வானின் பனியிங்கு வந்திறங்கும் காலை/
வதைகு ளிராலே உறைந்திடுமவ் வேளை/
ஏன்தான் பிறந்தோ மெனவென்று நாளை/
இழித்தே பெருக்கி டுவாரவரே
ஊரைக்/
காணின் னவரைக் கசிந்திடுமே கல்லும்/
கலங்காமல் 'குப்பை'வா
வென்றழைக்கு மூரே /
பேணி மனைச்சுத்தம் காத்திடுவோர் தம்மை/
பெருமையுடன் கூப்பிடத்தா
 னென்னகுறை
 கண்டீர்!//

(வெண்டளையான் இயன்ற எண்சீர் ஆசிரிய விருத்தம்.)

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!