Saturday, February 16, 2019

தன்னலம் மறுப்பாய் மனமே!

(வஞ்சிப்பா)

தன்னலந்தனை யெண்ணியேதினம்
 இந்நிலந்தனில் யிருப்பாரவர்
 எந்நலமதைப் பெறுவாரென
இன்னமுமறி கிலேனென்பதால்

நானும்

பெற்றதுங் கற்றதும் பேச்சினால் சொல்லியும்
உற்றதிற் சிற்சில ஊரினில்
அற்றவர்க் கீந்தே அகமகிழ்ந் தேனே!

- முருகானந்தம் சுப

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!