Thursday, February 7, 2019

பொசுங்கியது மனுதர்மம்

பொசுங்கியது மனுதர்மம்


 (கட்டளைக் கலிப்பா)

ஒன்றே மானிடர் யாவரு மென்றுரை
ஓங்கு சீர்மர புத்தமி ழர்மனம்
குன்றிச் சீர்கெட வோர்குலத் துக்கொரு
கோணல் நீதிசொல் லும்மனு வின்குரல்
மண்ணில் பேரிடி போலுமே வந்ததை
மண்ணின் பிண்டமாய்ப் பார்த்திருத் தல்தகா
தென்றே போர்க்குரல் எங்குமே சூழ்ந்ததால்
இன்று தீயிடை யம்மனு  வெந்ததே!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!