Tuesday, February 26, 2019

தாயே எனை வாழ்த்துவாயே!

(வஞ்சித் தாழிசை)
இன்மொழி நன்மனம்
என்றும் ஈந்து
என்நலம் காத்தாய்
இன்முகத் தாயே!

நல்லவை காட்டி
அல்லவை நீக்கும்
வல்லமை தந்து
வாழ்த்துவாய் தாயே!

உண்மையைப் பேச
நன்மையைச் செய்ய
உன்வழி யேற்பேன்
என்றுமே தாயே!!
- முருகானந்தம் சுப.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!