Sunday, September 15, 2019

#பேரறிஞர்_அண்ணா_பிறந்தநாள்

வழுவிலா குறள்நெறி வாழ்வினைக் கற்றவன்
முழுவதும் இத்தரை முத்திரை பதித்தவன்
கொலுவினில் இருப்பினும் குடிசையில் வாழ்பவர்
விழிகளின் சிரிப்பினை விளைக்கவே விழைந்தவன்
ஆரிய மாயைகள் அனைத்தையும் விளக்கியே
போரினைத் தொடுத்தவன் பொசுக்கிட அழைத்தவன்
இந்தியைத் திணித்துமே எம்மொழி அழித்திட
வந்தவம் மந்திகள் வாலினை அறுத்தவன்
மன்னவன் சொன்னசொல் போற்றியே
இன்தமிழ் நாட்டினை ஏற்றுவோம் பாரிலே!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!