Friday, September 20, 2019

அவர்தாம்_பெரியார்



#பெரியார்141.

#அவர்தாம்_பெரியார்

கேள்வி கேட்பவன் நாவில் இருப்பார்
கேட்டுத் தெளிபவன் நெஞ்சில் இருப்பார்
வேள்வி யாலனைத்தும்  விளையு மென்பானின்
விலாவினை முறித்து வேலெனக் கிளர்வார்.
                                                (கேள்வி)
நாள்பலன் பார்த்து நடுங்கிச் சாவோர்
நல்வழி யுணர்த்தும் நண்பனாய் நிற்பார்
தோள்வலி மறந்து தொண்டறங் காக்கும்
தூயவர் வாழ்வில் சுடரென ஒளிர்வார்
                                                 (கேள்வி)
மான அறிவின் அழகில் சிரிப்பார்
மனிதர் ஒழுக்க நெறியில் இருப்பார்
காலந் தோறும் பேதங் களையும்
களத்தில் தானே கருத்தாய் நிற்பார்
உலகை ஒன்றாய் ஆக்கத் துடித்து
உரிமை கோரி ஓங்கி ஒலிக்கும்
கலகக் குரலின் கனலாய் இருப்பார்
கறுக்கல் விலக்கும் சிவப்பாய் மிளிர்வார்
                                                       (கேள்வி)

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!